பாலின நிகர்நிலை

பாலினம் என்றால் பெண்கள், பெண்கள் மேம்பாடு போன்றவற்றை மையப்படுத்துவது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பாலினம் என்பது ஆண்கள், பெண்கள் மத்திய சமூக, கலாச்சார வரையறையாகும். இது உழைப்பு, சந்தை, குடும்பம், அரசியல் கட்டமைப்பு போன்றவற்றில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே வெளிப்படும் உறவு கட்டமைப்பின் வேறுபாட்டை வெளிப்படுத்தும் ஒரு கருத்து கருவியாகும்.

பாலினம் என்ற கருத்தாக்கத்தை விவரிப்பு நிலை, பகுப்பாய்வு நிலை என்ற 2 மட்டங்களில் விவாதிக்கலாம்.

1. விவரிப்பு நிலை :
விவரிப்பு நிலை ஆணுக்கும், பெண்ணுக்குமிடையேயான பால் வேறுபாட்டை குறிப்பது. அத்துடன் சமூக வேறுபாடுகள், வர்க்கம், சாதி, இனம், மதம், வயது, தொழில் மட்டுமல்லாமல், கால மாறுதலால் ஏற்படும் மாறுபாடுகளை விவரிப்பதாகும். மேலும் பாலினம் என்ற கருத்தாக்கம் சமூக ரீதியாக வரையறுக்கப்பட்டதால் அதனை மாற்றியமைக்க முடியும்.

2. பகுப்பாய்வு நிலை (Analytical)
பாலின முறைமையினால் தாக்கம் பெறுகின்ற ஆண், பெண் அடையாளங்கள், அதிகாரங்கள், அதிகார உறவுகள், வளங்கள் அவற்றை கட்டுப்படுத்துதல், அதனால் பெறும் பலன்கள் ஆகியவற்றை இனங்காணவும் ஆய்வு செய்யவும் நமக்கு வழியேற்படுத்துகிற தத்துவ மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையே பகுப்பாய்வு நிலை. மேற்கூறிய 2 கோணங்களிலும் பாலினத்தை பார்க்க வேண்டும்.

உழைப்பின் பாலின பிரிவினை :
ஆணும், பெண்ணும் என்ன செய்ய தகுதி உடையவர்கள் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் நிலவும் சமூக கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுப்பட்ட பொறுப்பு, கடமைகளை பிரித்தளிப்பதையே உழைப்பின் பாலின பிரிவினை என்று சொல்லப்படுகின்றது. இது 3 வகையாக பிரிக்கப்படுகின்றது.

உற்பத்தி உழைப்பு : (Productive Work)
நுகர்வுக்கும், வியாபாரத்திற்குமான பண்டங்களையும் சேவைளையும் (விவசாயம், மீன் பிடித்தல், சொந்த தொழில்) உற்பத்தி செய்வதும், குறிப்பாக சம்பளம் அளிக்கப்படும் வேலை அல்லது வருமானத்தை உற்பத்தி செய்பவை உற்பத்தி உழைப்பில் அடங்கும். ஆணும், பெண்ணும் உற்பத்தி உழைப்பில் ஈடுபட்டாலும் பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் பாத்திரமும், பொறுப்பும் மாறுபட்டிருக்கும். பெண்களின் உற்பத்தி உழைப்பு ஆண்களின் உற்பத்தி உழைப்பை விட குறைவான அளவுக்கே புலப்படக்கூடியதாகவும் குறைவாக மதிப்பிடக் கூடியதாகவும் உள்ளன.

மறு உற்பத்தி உழைப்பு : (Reproductive Work)
மறு உற்பத்தி உழைப்பு என்பது 2 விதத்தில் பார்க்கப்படுகிறது. உடலியல் மறு உற்பத்தி (Biological Work) உழைப்பு என்பது குழந்தையை கருவில் சுமப்பது, பெற்றெடுத்து பாலூட்டுவது, வளர்ப்பது போன்றவற்றை குறிக்கும். மற்றும் சமூக மறு உற்பத்தி (Social reproductive) உழைப்பு என்பது உணவு தயாரிப்பு, தண்ணீர் பிடிப்பது, விறகு கொண்டுவருவது வேலைகள் மற்றும் பராமரிப்பு, குடும்ப ஆரோக்கியம் போன்ற குடும்ப வேலைகள் மற்றும் பராமரிப்பு அடங்கும். மனித குலத்தின் இருப்புக்கு மறு உற்பத்தி பணி மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் மறு உற்பத்தி உழைப்பு மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுவதாகவும், அதிக நேரம் பிடிப்பதாகவும் இருந்த போதும் இது முக்கியமானதாக கருதப்படுவதில்லை. இது பெரும்பான்மையாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் பொறுப்பாகவே இருக்கிறது.

சமூக உழைப்பு (Community Work)
சமூக உழைப்பு என்பது திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், சமூக முன்னேற்ற செயல்பாடுகள் (ரோடு, மின்வசதி, பன்ளிக்கூடம், ரே­ன் கடை, சுகாதாரம்) குழுக்களிலும், அமைப்புகளிலும் பங்கெடுப்பது, உள்ளூர், அரசியல் செயல்பாடுகள் இன்னும் இது போன்ற சமூக நிகழ்வுகளை கூட்டாக செயல்படுத்துவதாகும். சமூகங்களை பற்றிய பொருளாதார ஆய்வில் இது போன்ற உழைப்பு ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூக செயல்பாட்டிற்கு தன்னார்வ உழைப்பு கணிசமாக செலவிடப்படுகிறது. அது சமூகத்தின் ஆன்மீக, பண்பாட்டு வளர்ச்சிக்கும், சுய நிர்ணயத்திற்கும் மிகவும் அவசியமாகும்.

மேற்கூறிய பாலின உழைப்பு பிரிவினையை கணக்கிட்டால் (24 மணி நேரத்தில் ஆண் செய்யும் வேலைகளையும், பெண் செய்யும் வேலைகளையும் பட்டியலிடுதல்) பெண்கள் செய்யும் வேலைகள் பெரிதாக கணக்கிடப்படாத நிலை விளங்கும். ஆணின் உழைப்பும், பெண்ணின் உழைப்பும் சமமாக மதிப்பிடப்படுவதில்லை. சமமாக பிரதிபலன் பெறுவதில்லை என்பதால் பாலின உழைப்பு பிரிவினை சமனற்ற நிலைக்கும், மேல் கீழ் அதிகார கட்டமைப்புக்கும் இட்டு செல்கிறது

தொகுப்பு :
S.மரியசகாயமேரி
CCO, கும்பகோணம்

மூலிகை மருத்துவம் - செய்முறை விளக்கம்

கடந்த இதழில் மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விவரங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இம்மாத இதழில் கிராமபுறங்களில் எளிதாக பரவும் நோய்கள் பற்றியும் அதற்குரிய காரணங்கள் பற்றியும், அறிகுறிகள் பற்றியும் தீர்விற்கான மருத்துவம் பற்றியும் மேலும் மருந்து செய்முறை பற்றியும் இவ்விதழில் காண்போம்.

மருந்துகளின் வகைப்பாடு :
சித்தமருத்துவத்தில் 64 வகையான மருந்துகள் உண்டு.

32 உள் மருந்து

32 வெளி மருந்து

சூரணம் : (பொடி செய்தல்) சூரணம் என்பது மூலிகையின் இலை, தண்டு, பூ, வேர், காய், கனி போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர காயம் (துணியால் சளிப்பது) செய்ய வேண்டும். இது 6 மாதங்கள் வன்மையுடன் இருக்கும்.

தைலம் : மூலிகை சாற்றில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் கலந்து கொள்வது (பல முறை காய்ச்சுதல் என்பது காய்ந்து கொண்டிருக்கும் தைலத்தை ஒரு குச்சியில் எடுத்து அனலில் காட்டினால் சொட, சொட என சத்தம் கேட்கும்.  தைலம் ஒரு வருடம் வன்மையுடன் இருக்கும்.

மனப்பாகு : மனப்பாகு என்பது மூலிகை சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி தேன் பதத்தில் இறக்கி பத்திரப்படுத்தி பயன்படுத்துவது 3 மாதம் வன்மையுடன் இருக்கும்.

லேகியம் : லேகியம் என்பது மூலிகைகளுடன் மருந்து பொருட்களும், சர்க்கரையும் சேர்த்து காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் இறக்கி தேன் அல்லது நெய் சேர்த்து இறக்கி பயன்படுத்துவது (கம்பி பதம் என்பது காய்ந்து கொண்டிருக்கும் லேகியத்தை கரண்டி அல்லது கையில் எடுத்தால் கம்பி போல வரும்)

செந்தூரம் : செந்தூரம் என்பது பாசானம் மற்றும் உலோகங்களை மூலிகை சாறுடன் சேர்த்து செந்நிறம் காணும் வரை எரித்து பொடி செய்து வைத்துக் கொள்வது. 500 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

பஸ்பம் : பஸ்பம் என்பது பாசானம் அல்லது உலோகங்களை மூலிகை சாறில் அரைத்து வில்லை செய்து மண் சீலை செய்து காயவைத்து மருந்தின் அளவிற்கேற்ப விராட்டி புடமிட்டு எடுக்க வேண்டும்.

இது 900 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

குறிப்பு : 
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தனியாக சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் ஒரு அரிசி எடை அளவுதான் சாப்பிடவேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தீராத வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கை நீலக்கலரில் மாறினால் தீராத வியாதி என்பதாகும்.
கசாயம் : கசாயம் என்பது உலர்ந்த மூலிகை சரக்குகளை இடித்து நீர் விட்டு 8-ல் 1 பங்காக காய்ச்சி வடிகட்டி எடுப்பது. 3 மணி நேரம் வன்மையுடன் இருக்கும்.

கிராமங்களில் பரவும் பொதுவான நோய்கள் :
காலரா, அம்மை, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, கக்குவான் இருமல், சோகை, அக்கி, சிரங்கு, வாந்தி, பேதி, மூலம், புற்றுநோய், தொழுநோய், தலைவலி, பல் வலி, காது வலி, கண் வலி, விரல் சுத்தி, கட்டிகள், காசநோய், ஆஸ்த்துமா, குடல் புண், மூட்டு வலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, தேமல், வாதநோய், வயிற்று வலி, மாரடைப்பு, கர்ப்பப்பை கோளாறு, நெஞ்சு வலி, தொண்டையில் சதை வளர்தல் (டான்சில்) கால் ஆணி, பித்த வெடிப்பு, பொடுகு, குடற்புழு.

1. நோய் - வயிற்றுப்போக்கு

காரணங்கள் :
  • - ஜீரணமின்மை,
  • - எண்ணெய் பதார்த்தங்கள்,
  • - நெய், எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது
  • - மாவு பண்டங்கள்,
  • - காரமான உணவு,
  • - அதிக கண் விழிப்பு,
  • - அதிக பிரயாணம்
அறிகுறிகள் : வயிற்றுக் கடுப்பு, வயிறு இறைச்சல், வாந்தி, வாய் குமட்டல், புளிச்ச ஏப்பம், வாந்தி வருவது போல் உணர்வு, மலத்துடன் சளி, இரத்தம், சிறுநீரைக் கட்டுப்படுத்தும், காது அடைத்தல், கண் சரியாக தெரியாமை.

மருத்துவம் : காட்டாத்திப்பூ சூரணம் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

மருந்து செய்முறை :

காட்டாத்திப்பூ சூரணம் தேவையானவை :
காட்டாத்தி பூ ¼ கிலோ
ஓமம் ¼ கிலோ

ஓமத்தை லேசாக வறுத்து இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்ய வேண்டும்.

காட்டாத்திபூவை இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி தேன் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

2. நோய் :  சளி, இருமல்

காரணங்கள் :
  • - குளிர்ந்த தண்ணீர் குடித்தல்.
  • - குடிநீர் மாறுபடுதல்.
  • - இரசாயன பொருட்கள் சுவாசித்தல்.
  • - நுரையீரல் குழாய் சிறிதாக இருத்தல்.
  • - உள் நாக்கு வளர்ச்சி
அறிகுறிகள் : இருமல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல்

மருத்துவம் :
  • - சந்திர கலா லேபம்
  • - துளசி மனப்பாகு
  • - ஆடாதொடை சூரணம்
  • - கற்பூராதி தைலம்
  • - திரி கடுகு சூரணம்
  • - தூதுவலை லேகியம்
மருந்து செய்முறை :

துளசி மனப்பாகு

துளசிச்சாறு - 1 லிட்டர்
பனைவெல்லம் - 1 கிலோ
சீரகம் - 200 கிராம்
இஞ்சி - ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை

தூதுவலை லேகியம் :

தேவையான பொருட்கள் :

தூதுவலை சமூலம் (தலை முதல் கால் வரை) - டி கிலோ
ஆடாதொடை - 200 கிராம்
துளசி - 100 கிராம்
ஓமவல்லி - 100 கிராம்
கண்டங்கத்திரி - 50 கிராம்
இன்பூரல் - 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
சித்தரத்தை - 25 கிராம்
அதிமதுரம் - 25 கிராம்
இஞ்சி சாறு - 50 மில்லி
பனைவெல்லம் - 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில்  வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

3. நோய் : ஆஸ்துமா 

காரணங்கள் : குளிர்ந்த நீர், சுகாதாரமின்மை,

அறிகுறிகள் : இருமல், தும்மல், சளி, மூக்கில் நீர் வடிதல், மூச்சுத்திணறல், நெஞ்சில் சளி, சளி கட்டியாக இரத்தத்துடன் வருதல், மாலையில் காய்ச்சல், உடம்பு இளைத்தல்

மருத்துவம் :
  • திரி கடுகு சூரணம்
  • துளசி மனப்பாகு
  • ஆடாதொடை சூரணம்
  • தூதுவலை லேகியம்
  • சிவனார் அமிர்தம்
  • வெள்ளருக்கு குளிகை
தொகுப்பு : A. சந்தியாகு

இயற்கை சீற்றங்களும், மறுவாழ்வு பணிகளும்...

பெருமளவில் மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் அளவில்லா சேதங்களையும் பின்விளைவுகளையும் எதிர்பாராத வகையில் ஏற்படுத்தும் ஒரு சம்பவமே பேரிடர் (லிr) இயற்கை சீற்றம் எனப்படும்.

இயற்கை சீற்றங்கள் இரண்டு வகை உள்ளன.

1. இயற்கை பேரிடர்
2. மனிதரால் ஏற்படும் பேரிடர்

இயற்கை பேரிடர் :

புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, வறட்சி, ஆழிப்பேரலை (சுனாமி), இடி மின்னல் போன்றவை கடுமையான வெயில் தாக்கம், தீ விபத்து சாலை விபத்து.

மனிதனால் ஏற்படும் பேரிடர் :

சுற்றுச்சூழல் மாசுபாடு, அணுக்கதிர் வீச்சு, தீவிரவாத தாக்குதல், இனக்கலவரம், மதக்கலவரம், தொற்றுநோய், சாலை விபத்து.

நிலநடுக்கம் (பூகம்பம்)
நமது பூமியின் விட்டம் 12, 756 கி.மீ ஆகும். நடுவில் உட்கருவான ளீலிre உள்ளது. பூமியை சுற்றியுள்ள கவசத்தில் (Mantle) ஆரம் 2,700 கி.மீ இது தீக்குழம்பு (Magma) போன்று உள்ளது. இதன்மேல் வசிக்கும் பூமி தட்டின் ஓடுகள் (Crust) உள்ளது. பூமி மேல் ஓட்டின் உயரம் 25 முதல் 70 கி.மீ. வரை உள்ளது. பூமி ஒரு மணி நேரத்தில் 529.75 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. சூரியனை வினாடிக்கு 29.78 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. பூமியின் மேல் பகுதி மிகப்பெரிய 7 பூமி தட்டுகளாக உள்ளன.
  1. வட அமெரிக்கா தட்டு,
  2. தென் அமெரிக்கா தட்டு,
  3. ஆப்பிரிக்கா தட்டு,
  4. யுரேசியா தட்டு
  5. பசிபிக் தட்டு
  6. ஆஸ்திரேலியா தட்டு (இந்தியாவில் உள்ளது)
  7. அண்டார்டிகா தட்டு
நிலத்தடியில் உள்ள தட்டுக்களை கண்டத்தட்டு என்றும் சொல்லலாம். பூமி தட்டுக்கள் பல திசைகளில் நகர்கின்றன. நகர்வதால் ஒன்றை ஒன்று எதிர்த்து இடித்துக் கொள்கின்றன. இதேபோல் கண்டத் திட்டும் கடல் திட்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது நிலம் உயர்ந்து மணல் தொடர்கள் உருவாகும். கடலில் ஆழமான பள்ளம் ஏற்படலாம்.

எரிமலை :
பூமி தட்டுக்களுக்கு கீழ் உள்ள கதிரியக்க பொருட்களின் அழிவினாலும் பூமி தட்டுக்களின் முனைப்பகுதி உரசுவதாலும் அதிக வெப்பம் உருவாகி பூமி தட்டுக்களை நகரவும் வெடிக்கவும் செய்கின்றன. இது எரிமலையாகும்.

நிலநடுக்கம் :
இந்திய துணைக்கண்டமானது இந்திய நிலத்தட்டின் மேல் அமைந்துள்ளது. இந்த தட்டு வருடத்திற்கு 5 செ.மீ அளவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு யூரே´யா விளிம்பை ஒட்டியும், மேல்தட்டின் விரிசல்களை ஒட்டியும் ஆங்காங்கே நில நடுக்கம் ஏற்படுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் குஜராத், உத்ராஞ்சல், அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

சுனாமி :
ஆழ்கடலின் அடிப்பரப்பில் எந்த ஒரு இடமாவது பூகம்பத்தாலோ எரிமலை வெடிப்பினாலோ, விண் கற்கள் விழுவதாலோ பாதிக்கப்படும்போது ஏற்படும் மிகப்பெரிய கடல் அலையே ஆழிப்பேரலை சுனாமி எனப்படும். இது அடுக்குக்கடுக்கான மிக நீண்ட உச்சியுள்ள அலைகளை கொண்டு அலை தொகுப்பு ஆகும். சுனாமியின் வேகம் அது செல்லும் கடல் நீரின் ஆழத்தை பொறுத்து அமையும். பொதுவாக சுனாமி மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் 5,000 கி.மீ ஆழத்திலும் பயணம் செய்யும்.

புயல் :
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய கடற்கரை ஓரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடங்கி மேற்கே (நுr) கிழக்கே நகரும்போது அது புயலாக மாறுகிறது.

இந்தியாவின் புயல் காலம் :
  • மே முதல் ஜுன் வரை - கோடை காலம்
  • அக்டோபர் முதல் டிசம்பர் வரை - மழை காலம்
இந்திய நிலப்பரப்பில் 8 % புயல் ஆபத்து உள்ளது. இந்தியாவில் 8041 கி.மீ. கடற்கரை பகுதி உள்ளது.

புயல் வகைகள் :
  1. குறைந்த காற்றழுத்தம் காற்றின் வேகம் - 31 கி.மீ.
  2. அழுத்தம் காற்றின் வேகம் - 31- 41 கி.மீ.
  3. பேரழுத்தம் காற்றின் வேகம் - 50 - 60 கி.மீ.
  4. சுழல்காற்று (புயல்) - 62 - 78 கி.மீ.
  5. கொடுஞ்சுழல் காற்று (புயல்) - 89 - 118 கி.மீ.
  6. பெருஞ்சுழல் காற்று (புயல்) - 119 - 221 கி.மீ.
  7. மா சுழல் காற்று - 221 -க்கு மேல்

வெள்ளம் :
ஆற்று, நகர்புறம், கடற்கரை, திடீர் வெள்ளம், ஒரு குறுகிய பருவத்தில் தொடர்ச்சியாக பெய்யும் 3 - 4 மாதங்களில் பெய்யும் மழையின் அளவு 76 % மழையே வெள்ளத்திற்கு காரணம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் 40 கோடி ஹக்டேர் நிலமும் பல லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 0.45 மில்லியன் ஹக்டேர் பரப்புடைய நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கும் மாவட்டங்கள் ஆகும்.

வெள்ளத்திற்கு காரணம் :-
நிலப்பகுதியில் உள்ள தண்ணீர் ஆற்றுத்தண்ணீர் ஏதோ ஓர் ஆதாரத்திலிருந்து மேல்மட்ட நீர் வழக்கத்திற்கு மாறாகவும் வேகமாகவும் வருதல் மற்றும் மண் சேற்றின் ஓட்டம் ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் மண் சரிவு ஏற்படுதல் ஆகும்.

புவி வெப்பம் :
கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயுமண்டலம் சூடாகிறது.

ஆபத்து :
  • பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம்.
  • மழைக்குறைந்து குடிநீர் பற்றாக்குறை பஞ்சம் பட்டினி அதிகரிப்பு
  • நோய்கள் பரவுதல்
இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகள் :
  1. அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம் சீர்குலைகின்றன.
  2. நமது பெற்றோர், குழந்தைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் பாதிப்படைகிறது.
  3. தொற்றுநோய்கள் பரவுகின்றன.
  4. நமது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிப்படைகிறது.
  5. பள்ளி செல்ல முடியாமல் போய் விடுகிறது.
  6. ஆழ்ந்து கல்வி கற்கமுடியாமல் போய்விடுகிறது.
  7. மனநிலை பாதிப்படைகிறது.
  8. நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து விளையாட முடியாமல் போய்விடுகிறது.
  9. அவசர கால நிலைமைகள் ஏற்படுகிறது.
  10. பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.
  11. சாலைகள் துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு
  12. உற்பத்தி குறைவு, பொருட்களின் பற்றாக்குறை இதன் மூலம் விலைவாசி ஏற்றம்.

மறுவாழ்வு பணிகள் :

நமது ஊரில் உள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகளை கண்டறிதல்.

தண்டோரா போடுதல், தெரு முனைக்கூட்டம். வாகனப்பிரச்சாரம், உள்ளூர் கேபிள் டி.வி. ஒளிபரப்பு, ரேடியோ, துண்டு பிரச்சாரம், கிராம மின் எச்சரிக்கை தகவல் மையம், மிதவை உடை, மூடிய தகர டப்பா, ட்ரம், மரங்கள், பெரிய பிளாஸ்டிக் குடங்கள், மிதக்கும் மரங்கள் பயன்படுத்துதல்.

புயல் பாதுகாப்பு இல்லம், உயரமான கட்டிடம், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், தேவாலயம், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றின் உதவியுடன் கிராமக் குழுக்கள், நிவாரண குழுக்கள், VAO, RI, R.D.O,  தாசில்தார், மாவட்ட ஆட்சியர் தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், JRC, NCC, NSS போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

தகவல் தொகுப்பு :
A.அற்புதராஜ், ஒருங்கிணைப்பாளர்,
ஆவன காப்பு, கும்பகோணம்.

சுற்றுச் சூழலைக் காப்போம்

ஒன்பது கோள்களும் ஒன்றான "பூமி" அண்ட வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. மற்ற எந்த கோள்களுக்கும் இல்லாத பலசிறப்பு அம்சங்களை குறிப்பாக உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற அற்புதமான சூழலைப் பெற்றுள்ளது. ஆனால் பூமியின் நலமும், வளமும், சூழலும் குன்றிக் கொண்டே இருக்கின்றது. வளிமண்டலத்தில் காற்று, நீர், நிலம் மாசு காரணமாக உயிரினங்கள் அனைத்தும் தாமாகவே அழியும் நிலை உருவாகியுள்ளது. வானிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரித்துள்ளது. சோலை வனங்கள் அனைத்தும் பாலைவனங்களாக மாறியுள்ளன. கோடிக்கணக்கான உயிரினங்களில் ஓர் உயிரினம் தான் மனிதன். இம் மனிதன் பூமியில் மற்றும் வளிமண்டலத்தில் கிடைக்கக் கூடிய இயற்கைப் பொருட்களை கைவசப்படுத்திவிட்டான். மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு 90 விழுக்காடுக்குமேல் தன்னைச் சார்ந்த இயற்கைச் செல்வத்தை அழித்து விட்டான். மனிதன் செய்த அனைத்து இயற்கை அழிவுகளும் சமன்படுத்தப்படவேண்டும்.

‘பாரதநாடு பழம் பெரும் நாடு' என்ற புகழுக்கேற்ப நம் நாடு பழமை வாய்ந்த நாடு. நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவையே இதற்குத் தக்க சான்று. நமது இந்தியத் துணைக் கண்டம் உருவாகி பல கோடிக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு பழமை வாய்ந்த, இயற்கை வளம் நிறைந்த நம் இந்திய நாட்டில் தான் சூழல் சீர்கேடுகள் நிறைய இருக்கின்றன. தொழிற்புரட்சி என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. மனித சமூகமின்றி இயற்கை தனித்து வாழும். ஆனால் இயற்கையின்றி மனித சமூகம் வாழ முடியாது.

உலக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு, முப்பது கோடி பேர் உடல்நிலை அவதி உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நவீன வீட்டு உபயோகச் சாதனங்களால் கரியமில வாயு நிறைய வெளிப்படுகிறது. இதனால் பூமி சூடாகி வானிலை மாற்றமும் சூழல் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

ஆண்டு ஒன்றுக்கு 800 கோடி டன் வளமான மண் கடலிலே கரைந்து வீணாகின்றது. கால வெள்ளத்தில் பாறைகள் பொடிந்து, பொடிந்து மண் மலர்ந்தது, இம்மண் மலர்ச்சிக்கு அணை போட்டால், மண்ணாக மாறும் செயல் தடைபடும். உருவான மண் கரைந்து வெளியேறும். நிலமானது நிலைத்து நிற்குமே தவிர வளமான மண் இராது. நவீன வேளாண்முறைகளால், விவசாயத்திற்கு ஆதாரமான நிலம், நீர் மற்றும் இடு பொருட்களான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், புது இரக விதைகள் இவற்றால் மண் வளம் குன்றிவிட்டது. மண் அரிப்பு, உவர்ப்பு, களர் ஆதல் போன்ற பல வழிகளில் மண்ணின் இயல்பான தன்மையில் மாறுபாடுகள் பல ஏற்பட்டுள்ளன. இன்றைய நகர் மயமாதல், தொழில் நுட்பம் போன்ற இவற்றால்

ஆண்டிற்குச் சராசரியாக 0.8 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடு நிலப்பரப்பை நிரந்திரமாக நாம் இழந்து வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் ‘உலக பூமி நாள்' கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்று ‘உலகளவில் நினை உனதளவில் செயல்படு' (Think Globally Act Globally) என்ற கூர் வார்த்தைக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை பூமியிலிருந்து நம்மால் விரட்ட இயலும். நமது சுற்றுப் புறங்களில் வீணான காகிதங்களை மறு சுழற்சிக்கு அனுப்ப உதவ வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு இணைந்த பொருட்களை உற்பத்தி செய்ய வலியுறுத்த வேண்டும். கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது துணிப்பைகள், சணலால் ஆன பைகன், உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் அபாயத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

‘அன்னை பூமி, நமக்கென்ன செய்தது என்று கேட்காதே

அன்னை பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்'.

என்கிறார் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி. நாம் வாழும் இந்த செழுமையான பூமியை பிறர் (நமது சந்ததியினர்) வாழ சிறப்பான இடமாக விட்டுச் செல்ல வேண்டும்.

மனவுறுதியும், சேவை மனப்பான்மையும் நிரம்ப பெற்ற நாம் நம்முடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இப்பூமியின் சுற்றுச் சூழல் நலம் காக்க ‘இயற்கை சக்தி'களை நாம் மாசு படுத்தக் கூடாது. இயற்கையும், சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையுமென உணர்ந்து நாம் சுற்றுச் சூழல் காக்க மரம் நடுதலை நம்மூர்களில் உள்ள மக்களுக்கு ஊக்குவித்து மரம் நடுதல் பணியை நாமும் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகளை (நெகிழிப்பைகள்) முடிந்தவரை உபயோனப் படுத்தாமல் இருத்தல் வேண்டும். நம் வாழ்க்கையில் மேற்கூறியவற்றை செயல்படுத்துவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியை வாழ விடலாம். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அழகிய உலகினை விட்டுச் செல்லாலம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எம்.ஃபில், பி.எட்.,
விரகாலூர்

உலக வெப்பமாதலைத் தடுப்போம் ! (Global Warming Awareness)

மக்களே விழித்தெழுங்கள் ! புவி வெப்பமயமாதலை தடுங்கள் !!

இயற்கை சூழல் மாற்றத்தினால் நம் நாடு அதிக அளவில் பாதிக்கப்படும்.

இயற்கை மாற்றத்திற்கான காரணங்கள்
  • வளிமண்டல வாயுக்கள்
  • தொழிற்சாலை மற்றும் அணுமின் நிலைய கழிவுகள்
  • பெருகி வரும் மக்கள் தொகை
  • நிலக்கரி உலைகள், எரிசக்தி, எண்ணெய் உலைகள்
  • வாகன உற்பத்தி பெருக்கம்
இயற்கை சீர்கேடுகள் :
  • சூறாவளி
  • வெள்ளம், பஞ்சம்
  • ஓசோன் ஓட்டை
  • பனிப்பாறை உருகுதல்
  • கடல் நீர் மட்டம் உயர்வு
  • கோடை மழை குறைவு
  • கரியமில வாயு அதிகரிப்பு
வெப்பமயமாதல்
  • விவசாய பாதிப்பு
  • நீர் நிலைகளில் தண்ணீர் குறையும்
  • காடுகள் அழியும், விலங்குகள் பாதிக்கும்.
  • மழை குறையும், தொடர் விவசாயம் செய்ய முடியாது.
  • ஏழ்மையை உண்டாக்கும்.
  • சமுதாய சீர்கேடுகள் உண்டாகும்
  • புற்றுநோய், சரும வியாதிகள்,
  • கண் வியாதிகள் தோன்றும்.
  • அலர்ஜி, ஆஸ்துமா உண்டாகும்.
  • எதிர்காலம் பற்றி கேள்விக்குறியாக உள்ளது.
  • சத்தான உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
  • உழைப்பாளர் வர்க்கம் பாதிக்கப்படும்

தடுப்பு முறைகள் :

  • சூரிய ஒளி வெப்பத்தை சக்தியாக மாற்றுதல்
  • குளிரூட்டியை மிதமாக உபயோகப்படுத்துதல்
  • துணிப்பை பயன்பாட்டினை கையாளுதல்
  • நாகரீகம் என்ற பெயரில் இயற்கையை கெடுக்க வேண்டாம்
  • USE CFLs intead of Bulbs
  • மரம் நடுதல்
செய்யப்பட வேண்டியவைகள்:
  • Drive Less
  • Switch off : mobile Charger, computer if not used
  • குழல் பல்பை பயன்படுத்துவோம்
  • வாஷிங் மெஷினில் ஒரே நேரத்தில் துணியை துவைத்தெடுப்போம்.
  • கொடி கயிற்றில் துணியை உலர்த்துவோம்.
  • பொதுத்துறை பேருந்துகளில் பயணிப்போம்

மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !!

"மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.

"இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை" என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்" இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. "நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

"ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு"

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

"பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்"

உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க.

தொகுப்பு : குடந்தை அல்ஃபி

சிறப்பு பொருளாதார மண்டலம்


தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்.

சித்தரிப்பு :
"இன்னொரு உலகம் சாத்தியம்" என்று போராடி வரும் வேளையில் உலகமயமும் அதன் இயல்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தினை 'புதியதோர் உலகமாக' சித்தரித்து கொண்டுள்ளது.

இந்த பொருளாதார மண்டலம் யாருடைய நலனுக்காக ? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது ? இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது ? என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உண்மையான சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்திய நிலை :
2005 நவம்பர் மாதம் மாண்புமிகு பாரத பிரதமரால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் ! இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுவது என்னவென்றால் "நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது ; அதற்கான சர்வதேச அளவில் மண்டலங்களை அமைப்பது" என கூறப்படுகிறது மேலும் "வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது" என ஆசையாயும் கூறுகின்றது.

இதற்காக நமது மத்திய அரசின் வர்த்தக துறை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் 128 நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்திய அளவில் 304 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் அரசு அசுர வேகத்தில் திட்டம் தீட்டியுள்ளது.

பங்குதாரர்கள் :
அரசினால் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தினை அமைக்கப் போவது யார் ? வேறு யாருமல்ல நமது பங்காளிகள் ! ரிலையன்ஸ், டாடா, சஹாரா, யுனிடெக், வீடியோகான், மகிந்திரா, கல்யாணி குழுமம் போன்ற நிறுவனங்கள்தான் !
ஏரி நிறைந்தால் கரை கசியும்
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் முதல் 35 ஆயிரம் ஏக்கர் நிலம் வரை நிலம் கையகப்படுத்தலாம் என்ற செய்தியும் நம்மைப் போன்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளாய் அமைகின்றது. மும்பையில் ரிலையன்நிறுவனம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இம்மண்டலத்தை அமைத்துள்ளது. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரியது என கூறப்படுகின்றது.

"இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது. இந்தியா பல லட்சம் கிராமங்களை உள்ளடக்கியது" என்றார் மகாத்மா காந்தி அவரது வழி வந்தவர்கள் அவரது சிந்தனைக்கு சமாதி கட்டிக் கொண்டு வருகின்றனர். நன்செய் நிலம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு நிலக்கொள்ளை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இம்மண்டலத்தினால் நகர நெருக்கடி ஏற்பட்டு சமூக பதட்டமும் உருவாகின்றது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இது பற்றி கூறும்போது, "மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்" என்றார்.

உணவு பற்றாக்குறை :
ஆம் ! இது வரை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 67 சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒரு லட்சத்து 34 ஆயிரம் யஹக்டேர் நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 74 ஆயிரம் யஹக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது இது தான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது.

இச்சிறப்பு பொருளாதார மண்டலம் ஆசீர்வதிக்கப்பட்ட நவீன காலனியாதிக்கமாக செயல்பட்டு வருகின்றது.

ஏகாதிபத்ய தாராளம் :

  • இம்மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. 
  • இப்பொருட்களுக்கு பூரண வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. 
  • முதல் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி விலக்கு உண்டு.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்.
  • அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறு முதலீடு என்ற பெயரில் சலுகை நீடிப்பு செய்யப்படும்.
  • "ஏழை அழத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"
  • இம்மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு எவ்வித வரியும் கிடையாது.

சட்ட விலக்கு :

பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உள்ளிட்ட 27 வகைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர் வேலை, காண்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும் எட்டு மணி நேர வேலை பாதுகாப்பு மருத்துவ பாதுகாப்பு என சட்ட ரீதியான எந்த பாதுகாப்பும் இம்மண்டலத்தில் செல்லுபடியாகாது.

அரசுக்கு இழப்பு :
அரசின் இச்சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையினால் அரசுக்கு
ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறையே அறிவித்துள்ளது. இது ஒரு எச்சரிக்கை மணியாகவும் அரசுக்கு உள்ளது. ஆனால் அரசு இம்மண்டலத்தின் மூலம் எதிர்பார்க்கும் மூலதனம் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி மட்டுமே என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

வேலை ஏய்ப்பு :
வர்த்தகத்துறை இம்மண்டலத்தின் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும் என அறிவித்தது. ஆனால் 2006 வரை செயல்பட்டு வரும் 28 சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 5 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக மிகக் குறைந்த 1 லட்சத்து 650 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கேரளா - கொச்சினில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 7 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.

தொழிற்பேட்டைகள் அம்போ :
அந்நிய முதலீடு என்ற பெயரில் இம்மண்டலம் ஒரு கேள்விக்குறியாக அமையப்பெற்றுள்ளது. இதனால் மாநில அரசுகளால் ஆங்காங்கே துவக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை அரசு சட்டை செய்வதில்லை. தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளில் சாலை, மின்சார வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அம்பத்தூர் பேட்டையினை சீரமைத்தால் மட்டும் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 1 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கலாம். எனவே அரசு வேலை வாய்ப்பினை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், இதுபோன்ற பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளை வடிவமைத்துள்ளது.

ரியல் எஸ்டேட் :
சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்கும் நிறுவனங்கள் தாங்கள் கையகப்படுத்தும் நிலங்களில் 25 சதவீதத்தில் தொழிற்சாலையும் 25 சதவீத இடத்தில் சாலை, மின்சாரம் குடிநீர் உள்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதியுள்ள 50 சதவீத இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு உருவாக்கி கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்கள் வரி இல்லாமலே ரியல் எஸ்டேட் பிசினசெய்ய அரசே வழிவகை செய்துள்ளது.

மாநில அரசும் அம்போ :
இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளை சாரும். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி அதிகாரிகளுக்கு தான் இம்மண்டலத்தினை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு பொருளாதார மண்டலம் அரசுக்குள் அரசாக ; குறிப்பாக செல்வம் விளையாடும் அரசாக செயல்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

கடந்த கால வரலாறு :
இப்படித்தான் இந்திய அரசு இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. பனியன் தொழிற்சாலைகள், தோல் பொருள் உற்பத்தி, இறால் மீன் வளர்ப்பு என்று கூறி நாசப்படுத்தியது போதாது என்று இன்று சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகின்றது. விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை தந்து இத்திட்டம் நிறைவேற்றலாம் என கூறப்படுகின்றது. ஆனால் இது கூட தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்ற மறுப்பதுதான். இத்திட்டத்தின் உள்ள தொழிற்சாலைகள் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு அவற்றோடு நமது சிறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும்.

சீனாவில்...
மேலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். சீனாவில் இத்திட்டம் 1986-ல் தொடங்கப்பட்டது. அங்கு லாயக்கற்ற தரிசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசே இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. இதற்கு
"காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்"
கையகப்படுத்தப்படும் நிலங்கள் அரசுக்கே சொந்தமானது. முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு பின்பு மற்ற நிறுவனங்களைப் போன்று வரி விதிக்கப்படுகின்றது. இம்மண்டலத்திற்காக நிலம் வழங்கும் அனைவரும் பங்குதாரராக ஏற்றுக்கொள்ளப்பட்டு லாபம் தரப்படுகின்றது. இதன் மூலம் அந்நாடு 12 % பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா - சீனாவினை ஒப்பிட்டு பாருங்கள். இங்கோ கிராமப்புறம் திவாலாகி, விவசாயிகள் நிர்கதிக்கு ஆளாகும் சூழ்நிலை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தால் உருவாகியுள்ளது.

அரசிடம் எதிர்பார்ப்பு :
எனவே இம்மண்டலம் அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை உருவாக்கப்பட வேண்டும்.
நிலம் விலை குறித்து அனைத்து தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
நிலம் தொழிற்பேட்டையாக மாறுகின்றபோது நிலத்தை சார்ந்திருக்கின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று எழுந்துள்ளது. எனவே இதனை கிளர்ச்சி உருவாக்குவதன் மூலமே மாற்றங்களை நாம் உருவாக்க முடியும்.

செய்யுங்கள் :
இம்மண்டலத்திற்கு எதிராய் நாம் செய்ய வேண்டியது என்ன ?

  1. விவசாயத்தினை அடிப்படையாக கொண்டு அதனை வளர்க்கும் சேவை செய்யும் தொழிற்துறை அமைக்க நமது அரசுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
  2. நமது மரபு சார்ந்த விவசாய முறைகளை கடைபிடித்து நாம் நிம்மதியாக வாழ அரசை எதிர்த்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
  3. வணிக நலன்களை கட்டிக் காக்கும் சுய உதவிக்குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்திப்பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை உருவாக்கும் விதமாக தெரு, வார்டு, கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் குழுக்களே நிர்வகிக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கலாம் என அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
  4. எந்த தொழிலினை தொடங்கவும் அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்கும் மக்களை மய்யப்படுத்தும் "அதிகார மய்யம்" உருவாக்க அரசை கேட்க வேண்டும்.

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்

மதங்களின் பார்வையில் பெண்கள்...

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பினை நியாயப்படுத்தவும், கட்டிக் காப்பதற்கும் மட்டுமே மதங்கள் பயன்படுகிறது என்ற கருத்து சமூக சிந்தனையாளர்களிடம் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி  ஆணாதிக்க கருத்துக்களையும் மதங்கள் கொண்டுள்ளது.

இந்து மதத்தில்..

காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் பெண்களை இழிவுபடுத்தி கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ய இந்து தர்மம் “பெண்கள் வேதம் ஓதுதல் கூடாது. யாகம் செய்தல் கூடாது. துறவறம் காணவும் கூடாது. மேலும் பெண்கள் அச்சத்தின் விளைவாக பிறந்தவள் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு  அடக்கி ஆள வேண்டியவள்” என கூறுகிறது.
மனுதர்மமோ “பெண்கள் சிறு வயதில் பெற்றோரையும், முதுமையில் பிள்ளைகளையும் இளமையில் கணவனையும் சார்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
வர்ணாசிரம தர்மமோ “கர்ப்ப கிரகத்தில் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. இயற்கையான மாத விடாய் தீட்டாகும்” என கூறுகின்றது.
ஆனால் இதற்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாடுகளில் பெண்கள் சம உரிமை பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதுதானே உழைக்கும் மக்களின் தனி அம்சமாக உள்ளது.

கிறிஸ்தவ மதத்தில்...

பெண்ணால் உருவானதே பெரும்பாவமும், பெருஞ்சாபமும் ஆகும். அதனால் பெண்களை என்றும் அவர்களின் கணவன் ஆட்சி செய்வான் எனக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் 11,14 ம் அதிகாரங்களில் பெண்ணடிமை சாசனமே படைக்கப்பட்டுள்ளது.
திருச்சபை நிர்வாகத்தில் கூட ஆண்களே அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர். சமயச் சடங்குகளில் கூட பெண்கள் முன்னுரிமை பெறுவதில்லை.

முஸ்லீம் மதத்தில்...

பெண்கள் சமயக் குருக்களாக, ஆக முடியாது. தொழுகையில் பங்கு பெற முடியாது. பெண்கள் அழகையோ. அணிகலன்களையோ வெளிப்படையாக காட்டக் கூடாது. இதனால் தான் இந்திய முஸ்லீம் பெண்கள் “பர்தா” முறையினை பின்பற்றுகின்றனர்.
ஓர் ஆண் தலாக் ! தலாக் ! தலாக் ! என மூன்று முறை கூறினாலே பெண் விவாகரத்து செய்யப்படுகிறாள். ஆனால் பெண்களுக்கு இந்த உரிமையில்லை. முஸ்லீம் பெண்கள் பிற ஆடவருடன் பேசக் கூடாது என தடை செய்யப்படுகிறாள்.

வாழ்க்கையெனும் தத்துவம்

தற்போது இருக்கும் நிலையிலிருந்து தான் விரும்பும் நிலைக்கு வர முயற்சி செய்யும்போது, எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கையாகும். ‘எதிலிருந்து தொடங்குகிறது வாழ்க்கை ; எங்கு முடிகிறது’ என்ற சிந்தனை மனதில் எழும்ப வேண்டும். சிந்தனையின் உயிர்ப்பு இல்லையயனில் மனித வாழ்க்கை இறந்த நிலைக்கு ஒப்பாகும். தன்னைப்பற்றி முடிவில்லாத எண்ணற்ற சுயசிந்தனைகள் வாழ்க்கையாக பரிணமிக்கிறது. “ஒருவன் எப்படி இறந்தான் என்பதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இதைவிட அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். ஆனால் அதைப்பற்றி நாம் ஒருவரும் பேசுவதில்லை” என்கிறார் சாமுவேல் ஜான்சன். மனிதனால் பறவையைப் போன்று காற்றில் பறக்க முடியும். மீன்களைப் போன்று தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் மனிதனைப் போன்று அவனால் சில நேரங்களில் நடந்து கொள்ள முடிவதில்லை.

வாழ்க்கையில் எப்போதும் வாய்மூடி மெளனம் காக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் சில நேரங்களில் விசுவரூபம் எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முத்திரை பதிக்க முடியும், மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திடக்கூடியதாகும்.

ஒரு நேர்காணலுக்கு பல இளைஞர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் எல்லாம் வடிகட்டிப் பார்த்தபோது கடைசியாக இரண்டே இரண்டு இளைஞர்கள் மட்டும் மிஞ்சினார்கள். இருவரும் தகுதிகளைப் பொறுத்தவரையில் சரிநிகர் சமானம் பெற்றவர்களாக விளங்கினார்கள். வல்லுநர் குழு முடிவாக இருவரிடமும் ஒரே ஒரு வினாவைக் கேட்டது. உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லையயனில் எப்படி உணருவீர்கள் ? முதல் இளைஞன், “நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று பதில் சொன்னான். நீ போகலாம் என்று வல்லுநர் குழுவினர் கூறினர். இரண்டாவது இளைஞன் அதே வினாவிற்கு “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று மறுமொழி கூறினான். நீ வேலையில் சேரலாம் என்று ஒருமித்த குரலில் உடனே வேலை வாய்ப்பை வழங்கினர் வல்லுநர் குழுவினர். கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், இரண்டு இளைஞர்களும் சொன்ன வினா விடைகளில் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புலனாகும். ‘நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்’ என்று நம்பிக்கையில்லாமல் விரக்தியான ஒரு மனநிலையில் மறுமொழி சொன்னான் முதல் இளைஞன். ஆனால் இரண்டாவது இளைஞன் நம்பிக்கை ததும்பி நிற்கும் வண்ணம் எழுச்சி மிக்க மனநிலையோடு, “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்” என்று உரைத்தான்.

இந்த நிகழ்விலிருந்து நம் வாழ்வு மலர வேண்டுமென்றால், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவதிலே மாபெரும் சக்தி மறைந்திருக்கிறது. முதல் இளைஞனிடம் அவநம்பிக்கையும், உபயோகமற்ற எண்ணங்கள் இருந்ததினால் அவன் வேலை வாய்ப்பை இழந்தான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது வீடு அல்ல. வாழ்க்கை என்பது நீண்ட சாலை, அது நகரம் அல்ல. நமக்கு கிடைக்கும் இன்பங்களும், மகிழ்ச்சிகளும் சாலையில் இருக்கும் பயணியர் விடுதிகள், அங்கு நாம் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் வாழ்க்கையெனும் பயணத்தை தொடங்குகிறோம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு உரிய வாய்ப்பு கட்டாயம் வரும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது என்று கவியரசு கண்ணதாசனின் ஆசிரியர் வகுப்பில் அடிக்கடி கூறுவாராம். உண்மையில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வைர வரிகள் இவை. இன்னும் வாய்ப்பு வரவில்லையே என்று, மூடிய கதவையே பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு பக்க கதவுகள் மூடியிருந்தால் என்ன ? இன்னொரு பக்க கதவுகள் திறக்கும் ; வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலேயே  காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்காமல், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், உரிய வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் காலடி எடுத்து வைத்தால் நம் வாழ்வு மலரும் என்பது திண்ணம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எஃபில்., பி.எட்.,
விரகாலூர்

இயற்கை வேளாண்மை

உலகத்துக்கே உணவு “படைக்கும்” விவசாய மக்களுக்கு பசுமையான வணக்கம்
வானம் பேஞ்சிக் கெடுக்கும், இல்லேன்னா
காஞ்சிக் கெடுக்கும்.
இது நமது நாட்டு பழமொழி.
ஆம். காலம் தவறிய பருவமழை,  ஒரே நேரத்தில் கடும் தொடர் மழை, கடுமையான காற்று, புயல், வெள்ளம் இப்படியாக விவசாயம் பாதிக்கப்படும். அல்லது  மழையே இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போகும். இதுதான் விவசாய நிலைமை. பயிர் அறுவடை காலங்களில் தேவையில்லாமல் மழை பெய்து விவசாயி கண்ணீரோடு கடனாளியாக மாறும் நிலை தொடர் கதையாகவே உள்ளது. எனவேதான் நமது இந்திய நாட்டு விவசாய முறையை “சூதாட்டம்” என்பார்கள்.
இது இப்படி இருக்க நம்ம விவசாயிகள் விவசாயத்திற்கு அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய்கின்றனர். நவீன இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பயிர் பாதுகாப்பு, நீர், அறுவடை இப்படியாக இவைகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது. ஆனால் செலவினங்களை கணக்கிடும் போது விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் நாம் விவசாயத்தில் சுய சார்பு தன்மையை இழந்து மற்றவர்களை (உர கம்பெனி, கருவிகள்) சார்ந்து விவசாயம் செய்கின்றோம்.  மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, நீரை பாதுகாக்கும் முறைகள், (நீர் மேலாண்மை) பயிர் சுழற்சி முறைகள் இவைகள் பற்றி விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதை கற்றுக்கொடுக்க வேண்டிய வேளாண்மைத் துறையும், அரசும் கண்டு கொள்வதே இல்லை.
பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசே நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
“சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் வழியாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டு பெரும் முதலாளிகளின் வர்த்தக தளங்களாக நிலம் மாறி வருகின்றது.
எனவே பெரும் திரளாக விவசாயிகள் கூடி நமது நிலைமையை பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமது விவசாய முறையை நமக்காக மாற்றி மரபு விவசாய
முறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.
இந்த இதழில் “அமுத கரைசல்” அதாவது பயிர் ஊக்கி தயாரிப்பது பற்றி காண்போம்.
         பசுமாட்டு சாணம் - 10 கிலோ
ஹோமியம் - 10 லிட்டர்
வெல்லம் - 2 கிலோ
தண்ணீர் - 100 லிட்டர்
இவைகளை ஒரு நீர் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பெரிய கேனில் போட்டு கரைசலாக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு தடவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் கலக்கி விடவேண்டும். ஒரு நாள் கழித்து நமது கரைசலை பாசன வாய்க்காலில் லேசாக தண்ணீருடன் கலந்து பாய்ச்சலாம். கன்றுகள், காய்கறி செடிகள் இவைகளுக்கு குடிநீர் ஊற்றும்போது இக்கரைசலை கொடுக்கலாம். சொட்டுநீர் பாசனத்திலும் பாசனக் குழாய் வழியாகவும் பயிர்களுக்கு கொடுக்கலாம். இக்கரைசல் 1 ஏக்கர் நிலத்திற்கு உரியது. கடலை, நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு இக்கரைசலை பாசனம் மூலம் பயிர் ஊக்கியாக கொடுக்கலாம்.
பயன்கள் :
1. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய மூன்று சத்தும் சரிசம விகிதத்தில் பலன் கொடுக்கும். (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து)
2. மண் வளம் பெருகும். மண்புழுக்கள் மேல் நோக்கி வரும்.
3. மண்ணில் அதிகமாக பரவும். இதனால் பயிர் அடர்த்தி பெருகும்.
4. காய்ப்பு பருவத்தில் மணிகள் அதிகமாக பெருகும்.
5. பயிர்களுக்கு பயன் தரும் பூச்சிகளை வளர்க்கும்.
6. குறைந்த செலவில் பயிர்களுக்கு லாபம் தரும் ஊட்டச்சத்து (TONIC) ஆகும்.

D.A. ஜார்ஜ், ஒருங்கிணைப்பாளர்
KMSSS

தேர்தல் நேரமிது - சிந்திக்கும் காலமும் இது...!

நமது நாட்டின் 15-வது பாராளுமன்றத்தை அமைக்க வரும் மே 13 ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நேரத்தில் நாம் சிலவற்றை சிந்திப்போம்.
  1. மதசார்பின்மை என்று வெளியில் பேசிக்கொண்டாலும் சாதி, மத ரீதியாக மக்கள் உணர்வுகளை தூண்டி ஒட்டு மொத்த வங்கிகள் உருவாக்கப்படுகின்றன.
  2. கட்சிகளின் பிரிக்க முடியாத ஒன்றாக கள்ள கருப்பு பணம் உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தாலும் அளவுக்கதிகமாக கருப்பு பணம் செலவழிக்கப்படுகிறது.
  3. அண்மைக் காலங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறது.
  4. தேர்தல் வன்முறை, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
  5. ஜனநாயகம் சூதாட்டமாகவே மாறிவிட்டது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை கடத்துவது மற்றும் விலை பேசுவது, சீட்டுக்கு பசையுள்ள நபர்களா என்று பல்ஸ் பிடித்து பார்ப்பது போன்ற நாடகங்கள் மலிந்துவிட்டது.
  6. கட்சிகள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பதில்லை. தேர்தல் 
  7. காலங்களில் பொய்யான வாக்குறுதிகள், அன்பளிப்புகள், கவர்ச்சி போன்றவற்றை காட்டி ஓட்டு வேட்டை நடத்தப்படுகிறது.
  8. உறவு நேற்று ; எதிர்ப்பு இன்று என்ற நிலையில் பதவிக்காக அணி மாறும்
  9. நிலையில் உள்ளன,  ஆட்சியை பிடிக்க போட்டி போடும் அரசியல் கட்சிகள்
    சிந்திப்போம் ! வாக்களிப்போம் !
    சிறந்தோரை தேர்ந்தெடுப்போம் !
     அம்மு

    போகுற போக்குல !

    அம்மா பசிக்குது
    சோறு போடுங்க
    தயவுடன் கேட்டார்
    வயதான பிச்சைக்காரர்.
    இங்க சோறுமில்ல
    ஒன்றும் இல்ல
    போய்யா என அதட்டினார்
    வீட்டுக்கார பெரியவர் !
    பிச்சைக்காரர்
    ஏக்கமுடன் நிற்க
    உள்ளிருந்து
    தாய்மையுடன் ஒரு குரல்
    இருங்க அய்யா !
    சோறுடன் வந்தாள் ‘அம்மா’
    அழுக்குப் பாத்திரத்தில்
    சோறு வாங்கி கொண்ட
    பிச்சைக்காரர்
    எங்கே அம்மா
    கூட்டு பொரியல்,  அப்பளம் என திரும்ப கேட்க,
    அம்மாவுக்கு கோபம் வந்தது,
    விக்கிற விலைவாசியில
    நீ இதையும் கேட்ப,
    இதற்கு மேலயும் கேட்ப
    போய்யா என சீறினார்.
    ஏம்மா ! விலைவாசி ஏறுனதுக்கு
    நான்தானா காரணம்
    விவரமாக சொல்லுறேன் கேட்டுக்கம்மா.
    உலகப்பொருளாதாரம் - சந்தை மயம்
    தனியார்மயம் - தாராளயமயம்
    உலக மயம் - திட்டம் பல வந்துருச்சி.
    அமெரிக்க டாலர்
    நம்ம உப்பு விலையை கூட
    உயர்த்திடுச்சு.
    பதுக்கலும் அதை
    பாதுகாக்கும் “அரசு” தாம்மா காரணம்

    தேவையில்லாத இலவசத் திட்டம்
    ஆடம்பரமான அரசு விழாக்கள்
    திட்டங்கள் வழியாக ஊழல் !
    கட்சிகளின் மாநாடு - விரயச் செலவுகள்.

    மக்களை மயக்க மானியம்
    நாட்டின் வருமானம்
    இப்படியாக வீணாகும் போது
    அதை சரிகட்ட

    அரசாங்கம் வரியைத்தான் கூட்டுவாங்க. வரிகள் ஏறும்போது
    பொருட்களின் விலை உயரும்
    என்பதுதானம்மா பொருளாதார விதி.
    இதையயல்லாம்
    யாரும்மா கேட்கிறது...
    அதனால விலைவாசி ஏற்றத்துக்கு
    ஆளும் அரசும்
    ஆளப்படும் நம் மக்களும் தானம்மா பொறுப்பு...
    இதையயல்லாம் பேச
    நீ யாருன்னு கேட்குறீங்களா ?
    நானும் இந்த நாட்டுல
    ஓட்டு போட்ட
    ஒரு பிச்சைக்கார பிரஜையம்மா...
    என பெரிய விரிவுரையாற்றி...
    நகர்ந்தார் அந்த வயதான
    பிச்சைக்காரர்
    போகுற போக்குல...
    செய்திகள் சொல்லி கொண்டே...

    G.லிண்டே, 
    கங்கைகொண்டசோழபுரம்.

    மழை நீர் சேமிப்பு

    “நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.
    அனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர். ஒரு நாட்டினுடைய வலிமையும், பெருமையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகின்றது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால் தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாக போற்றுகின்றோம். ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்க்கையை தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் அமைகின்றது.
    மழைநீர் வீணாக்கிவிடாமல் நிலத்துக்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழைநீர் சேமிப்பு எனலாம். நிலத்தடி நீர்  குறைவதை தடுக்கவும், நீர் வளத்தை பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கிறோம். மேலும் வறட்சி காலங்களில் கால்நடைகளை பராமரிக்கவும் இந்த மழை நீர் அதிகம் தேவைப்படுகிறது. பக்குவமாகச் சேமித்து சிக்கனமாக செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.

    சேமிக்கும் முறைகள் :
    பயிரிடும் முறைகளை மாற்றியும், பாசன வழிமுறைகளை மாற்றியும், நீரை பயன்படுத்துகின்ற முறையினையும் பெரிய அளவில் நீரை சேமிக்கலாம்.
    ஏரி, குளங்களை ஏற்ற முறையில் தூர் வாரி, பாதுகாத்து நீர் வழிகளை அடைக்காமல் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவன செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீரை சேமிப்பதற்கு சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை மெழுகிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டுவிடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் உள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும். கிணறுகள் இல்லாத வீடுகளில் சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரை பாய்ச்சி அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் ஆழ்குழாய்க் கிணற்றுக்குள் செலுத்தி சேமிக்கலாம்.

    பயன்கள் :
    பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர் வளத்தைப் பெருக்கலாம். இயற்கை வளங்களைப் பெருக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைப் தடுக்கலாம். இன்றைய சேமிப்பு நாளைய தேவை என்பதற்கேற்ப பருவ மழையானது பெய்யாது பொய்க்கும்போது ஏற்படுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டையும் கடும் பஞ்சத்தையும் மழை நீர் சேகரிப்பால் ஈடுகட்ட முடியும்.

    இறுதியாக :
    நம் நாடு மிகப் பெரிய வளம் நிறைந்த பூமி ஆகும். காடுகள், மலைகள், ஆறுகள், தரிசு நிலங்கள், கடல்கள், பெரிய ஏரிகள் போன்ற இயற்கை வளம் கொண்ட நம் திருநாட்டில் மழை பெய்கின்ற நாட்களில் அதனை சேமித்தால் மேற்கண்ட வளம் மேலும் பெருகும். இமயம் முதல் குமரி வரை வற்றாது வளம் சுரக்கும் பெரிய ஆறுகள் அன்று முதல் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மூலக் காரணம் மழையே.
    உயிரின் உறைவிடம் உடல். மழைநீரின் உறைவிடம் நிலம்.  எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்து சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
    விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மழைநீர் சேமிப்பில்  ஈடுபட வேண்டும். மழைநீரை சேமித்து காத்து, பக்குவமாக செலவிட்டு மண் வளம், மனித வளம் காத்து நாடு செழிக்க நாம் வளர முயற்சிகள் எடுப்போம்.

    G.மீரா,
    கங்கைகொண்டசோழபுரம் 

    பெண்கள் நாட்டின் கண்கள்

    முன்னுரை :
    "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற நாமக்கல் கவியின் கூற்று முற்றிலும் உண்மையானது. எந்த நாடு அல்லது சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களோ அந்த சமூகமே சிறந்த சமூகமாகும். உலகில் மனிதர்கள் அனைவரையும் தனித்தனியாக தன்னால் கவனிக்க முடியாது என்பதால் தான் இறைவன் பெண்ணை படைத்தான் என்பார்கள். உண்மைதான்... அதை மெய்ப்பிக்கும் வகையில் தாய்மொழி, தாய்நாடு, கங்கை, காவிரித்தாய் என்று பெண்களை தாயாக பாவிக்கும் சமூகம் நமது பாரத சமூகமாகும்.

    சங்ககால பெண்கள் : 
    சங்க காலத்தில் அவ்வை, மாசாத்தியார், பொன்முடியார், கங்கை பாடினியார், பாரி மகளிர் என்றும் 30-க்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் ஆணுக்கு சமமாக கல்வி கற்று சமூகத்தில் உயர்நிலையில் இருந்துள்ளதை அறிகிறபோது ஆணுக்கு சமமாக பெண்கள் நடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது உறுதியானது. ஆனால் இடைக்காலத்தில் அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? பேதமை என்பது மாதர்க்கு அணிகலன் என்று கூறி அடிமையும், கொடுமையும் செய்யப்பட்டனர்.

    பெரியார், திரு.வி.க, பாரதி, முத்துலெட்சுமி, அம்பேத்கார், தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் பெண்அடிமைத் தனத்தை உடைத்தெறிந்தனர். குடத்திலிட்ட விளக்குகளாய் இருந்த பெண்களை குன்றிலிட்ட விளக்காய் ஒளிர செய்தனர். அவர்களின் சீரிய முயற்சியால் பெண்கள் தங்களின் சுய சக்தியை உணர்ந்து முன்னேற ஆரம்பித்தனர்.

    தியாகத்தின் மறு உருவம் : 
    தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்று பன்முக பரிணாமம் பெறும் பெண்கள் தியாகத்தின் மறு உருவமாக திகழ்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றக்கூடியது மட்டுமல்ல, வணங்கத்தக்கதும் ஆகும். அதனாலேயே பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் ஆதாரமாகிய நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி அழைக்கிறோம். உலகத்திலேயே மிகவும் போற்றத்தக்கதாக தாய்மையை வைத்திருக்கிறோம். அவர்களின் தியாகத்திற்கும், உழைப்பிற்கும் கைமாறு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    பெண்கள் படும் இன்னல்கள் :
    இத்தகைய புகழ்வாய்ந்த பெண்கள் பல இன்னல்களையும் சந்திக்கத்தான் செய்கின்றனர். வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை போன்றவை இந்த நூற்றாண்டிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. வரதட்சணையின் தாக்கத்தால் முதிர்கன்னிகளாக வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம். அவர்களின் துயர்களை போக்க மத்திய, மாநில அரசுகளும் வரதட்சணை தடைச்சட்டம், பாலியல் கொடுமைகள் தடைச்சட்டம், பெண் கல்வி சட்டம், சொத்துரிமை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியுள்ளது.

    இந்த சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது. பயன்பாட்டுக்கு வரவேண்டும். இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் வரதட்சணை இல்லாத திருமணங்களை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். "ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண் என்று கும்மியடி" என்று கவிதை வரிகளில் சொல்லியவற்றை கவிதையோடு நிறுத்திவிடாமல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் சமூகம் உயர்வானதொரு இடத்தை அடைய முடியும்.

    சாதித்த பெண்கள் : 
    ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி சாதிக்க பெண்களும் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஆண்டாள், அரசியலில் இந்திரா, அறிவியலில் கல்பனா சாவ்லா, மருத்துவத்தில் முத்துலெட்சுமி, கணிதத்தில் சகுந்தலா, சேவையில் அன்னை தெரசா, விளையாட்டில் பி.டி.உஷா, நீதித்துறையில் பாத்திமா பீவி, காவல்துறையில் கிரண்பேடி என்று இந்திய வரலாற்றில் கோலோச்சியவர்கள் ஏராளம். மேலும் பச்சேந்திரிபாய், அருந்ததிராய் போன்ற பெண்கள் பெண் இனத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தற்போது சுதந்திரம் பெற்று 60-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் தனது அயராத உழைப்பால், தன்னம்பிக்கையால் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்று இருக்கிறார் பிரதீபா பட்டீல்.

    முடிவுரை : 
    ஆகவே அனைத்துப் பெண்களும் ஆற்றல் படைத்தவர்களே, அவர்களின் ஆற்றல் வெளியுலகுக்கு தெரியாமலேயே அழிந்து போவதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அதற்கு காரணம் அவர்களின் கல்லாமையே. ஆகவே அனைத்துப் பெண்களும் கல்வி என்ற திட்டத்தை செம்மையாக செயல்படுத்த வேண்டும். பெண்கள் நாட்டின் கண்களாகும். அத்தகைய பெருமை வாய்ந்த பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாரதம் உலக அரங்கில் வீரு நடை போட முடியும்.

    - P.அருண்பிரசாத், JKM 1051

    பெண்களும், சட்டமும்

    ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களை கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்ட திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது.

    ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினர். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒருவழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக் கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப் படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? இங்கேதான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்த பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும், சட்டங்களும் பெரிதும் உதவின. பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரிமை உடையன என்று மனுநீதி கூறுகின்றது.

    ஒரு ஆண் மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்தவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது.

    சட்டமும் கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமை கலாச்சாரம் தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்கள் பெண்களுக்கு பெரிதும் எதிராகவே அமைகின்றன.

    பெண் சிசு கொலை : 
    வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக "பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம் - 1870 - ம் ஆண்டு" அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன.

    கருகலைப்பு : 
    1971-ம் ஆண்டு சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்கு மட்டுமே கருகலைப்பு செய்யலாம்.


    1. கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்போது. 
    2. பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்ற பாதிக்கப்படும்போது. 
    3. மருத்துவர் சரியயன்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ கருச்சிதைவு செய்யலாம். 


     இந்திய தண்டனைச் சட்டம் - 1860

    ஆபாசப் புத்தகம், விளக்கப் படம், ஓவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன.

    பிரிவு - 292 - இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

    பிரிவு - 292 - குறைந்த அளவு தண்டனை ஆறுமாதச் சிறைக் காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்பட்டாமல் இருத்தல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

    பிரிவு - 293 - 6 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
    பிரிவு - 294 - 3 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

    1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்தது.

    பெண்ணை அவமதித்தல் : 
    பிரிவு - 354 - ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். தண்டனை - 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே.

    கட்டாயத் திருமணம் : 
    பிரிவு - 366 - ஒரு பெண்ணைப் பலாத்காரமாக அல்லது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தல் அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். தண்டனை - 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும்.

    பிரிவு - 366 ஏ - பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை பிறருடன் கட்டாய உடல் உறவிற்கு உட்படுத்துவது அல்லது உட்படுத்தப்படுவது குற்றம். தண்டனை - 10 ஆண்டுகள் சிறைக்காவல், அபராதம்.

    விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் : 
    பிரிவு - 373 - பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை எந்த வயதிலாவது விபச்சாரத்திற்கு அல்லது முறைகேடான உடலுறவு அல்லது வேறு சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்கு பெறுவதும், தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றம். தண்டனை : 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும். இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள்.

    பலாத்காரம் : 
    பலாத்காரம் என்றால் (1) அவளுடைய விருப்பத்திற்கு மாறாக (2) அவளுடைய சம்மதமின்றி (3) ஆணோ, பெண்ணோ, நெருக்கமான ஒருவருக்கு மரணம் (அல்லது) காயம், அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தை பெற்று (4) கணவன் இல்லையயன்று தெரிந்தபோதிலும் (5) சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக் கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் (6) புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும்போது.

    பிரிவு 375 யை பயன்படுத்த வேண்டும்.

    பிரிவு 376-ன் படி குறைந்தபட்சம் 7 வருடம் முதல் ஆயுள் சிறை தண்டனை அபராதமும்.

    கீழே கொடுக்கப்பட்ட நபர்கள் :

    (1) போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
    (2) சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர் பலாத்காரம் செய்தல்.
    (3) பெண்கள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி, தம் அதிகாரத்தை பயன்படுத்தி அங்குள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
    (4) கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
    (5) 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
    (6) குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
    இவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் முதல் ஆயுட்கால சிறை காவல் தண்டனை, அபராதமும்.


    பிறர் மனை சேர்க்கை : 
    பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவருடன் உடலுறவு கொள்வது பிறர் மனை சேர்க்கை என்ற குற்றமாகும்.
    பிரிவு 467-ன்படி 5 ஆண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
    இருதார மணம் :
    இருதார மணம் என்றால் ஒரு கணவனோ, மனைவியோ முதல் திருமணம் சட்டப் பூர்வமானதாக உள்ளபோதே மறு திருமணம் செய்வது குற்றமாகும்.
    பிரிவு 494-ன்படி 7 ஆண்டு சிறைக்காவல் தண்டனையும், அபராதமும்.
    பிரிவு 498ஏ - இது 1983-ல் புகுத்தப்பட்ட பிரிவாகும்.
    கணவர் (அல்லது) கணவரின் உறவினரால் கொடுமை குற்றமாகும். தண்டனை - 3 ஆண்டு சிறைக் காவல், அபராதம்.


    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - பிரிவு 14 
    இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும், சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர, அரசு மறுக்கக்கூடாது. பிரிவு-15 சமயம், சாதி, இனம், பால் பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும், எந்த குடி மகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது.

    P.ஆலிஸ்மேரி, 
    ஒருங்கிணைப்பாளர், திருவையாறு மண்டலம். 

    உரிமை கீதம்...

    பாரத தேசம்
    பழம் பெரும் தேசம்...
    ஆம்!
    மொழியால் - இனத்தால்
    நாம் வேறுபட்டாலும்
    இந்தியன் என்ற உணர்வில்
    அனைவரும் ஒரே இனம்...!
    அதுதான் மானுட தத்துவம்...
    ஆனால் ஏனோ...
    இயற்கையின் நன்கொடை
    ‘நீரில்' மட்டும் பிரிவினை...
    கூட்டு குடிநீர் திட்டத்தில்
    குறுக்கே நிற்கும் சதிகாரக் கூட்டம்...
    உயிர் வாழ
    பயிர் வளர
    மண் மலர...
    உன்னத ஆற்று நீர்
    அனைவருக்கும் பொதுமை...
    எனக்கு மட்டுமே
    நீர் சொந்தம்
    இது சுயநல போக்கின்
    உச்சக் கட்டம்...
    இது நம் தேச பக்திக்கு
    வைக்கும் வேட்டு...
    ஒட்டுக் கட்சிகள்
    ஆட்சி பீடம் ஏற
    திட்டமிடும்
    அரசியல் தந்திரம்...
    அன்பு சகோதரமே
    நம்பி கெட்டது போதும்...
    நம் தேச ஒற்றுமை நூலில்
    ஒன்றாக இணைவோம்
    நதி நீர் யாவும்
    பொதுவுடைமை என
    வீரமுழக்கமிடுவோம்
    உரிமைக்கு போராடுவோம்...
    பூமி பந்து
    பொது என போற்றுவோம்


    D.A.ஜார்ஜ், KMSSS


    சிந்திக்க சில நிமிடம்

    சுதந்திட நாட்டில்
    சுவாசிக்கக் கூட சுதந்திரம் இல்லை
    ஜனநாயக நாட்டில்
    வசிப்பதர்கோர் இடமும் இல்லை
    மக்களாட்சியில் ஓட்டு போட
    உரிமை இல்லை
    வாங்கியவன் (லஞ்சம்) வாங்கியவன் களினிலே
    கேட்டவன் கேள்வி கேட்டவன்
    ஏமாற்றும் பாரினிலே.

    - பா. தேவா, மகளிர் திட்டம்.

    விலைவாசி உயர்வு... விரக்தியில் மக்கள்...

    அண்மைக் காலமாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. இதனால் பாதிக்கப்படுவது கிராமப்புற ஏழை தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் தான். இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்ன?
    1)வேளாண்மைத்துறை வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாக உள்ளது என மத்திய அரசின் புள்ளி விபரமே இதற்கு சான்றாக உள்ளது. 
    2) விவசாய இடு பொருட்களின் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி விவசாயத் தொழிலை கைவிடும் சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 
    3) குறைந்த அளவிலான பொருட்களே ரே­ன் கடைகளுக்கு பெயரளவில் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ரே­ன் கடைகளுக்கு சென்று வாங்கினால்தான் கிடைக்கும் நிலை உள்ளது. 
    4) அத்தியாவசியப் பொருட்களின் ஆன்-லைன் வர்த்தகம் அமுலாக்கம். 
    5) பதுக்கல் முறையினை கையாளும் வணிகர்கள். 
    இவற்றினை களைய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். இல்லையேல் ஏற்கெனவே அரை வயிற்று பட்டினியோடு அல்லல்படும் மக்கள் அழிந்து போய்விடும் சூழல் ஏற்படும். அழிவின் ஆபத்தில் உள்ள அம்மக்களின் கோபம் வாக்குச் சீட்டில் பிரதிபலிக்கும் நிலை ஏற்படலாம் என்பதையும் அரசுகள் மனதில் கொள்ள வேண்டும். 

    - ‘அம்மு' 

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    பல நிலைகளில் உள்ள அலுவலர்கள் எடுக்கும் முடிவுகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்காதது தான் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    மக்களாட்சி மாண்பை இந்திய அரசு கொண்டிருந்த போதிலும் இதுவரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயக முறை அரசின் திட்டமிடல் செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பை தனிமைபடுத்தியே வந்துள்ளது. இதனால் மக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்புடையதாக செயல்பட வேண்டிய அரசு திசைமாறி பொறுப்பற்ற தன்மை கொண்டதாக வெளிப்படையற்ற செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டு மக்கள் விரோத அரசுகளாகவே நடைபெற்று வந்ததை / வருவதை காண முடிகிறது.
    பல்லாண்டு காலமாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மை தேவை என்றும், மக்களுக்கு நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமையை பெற தகவல் பெறும் உரிமைச் சட்டம் தேவை என்பதை பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
    இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. மக்களால் மக்களைக் கொண்டு, மக்களுக்கான நடத்தப்படும் ஆட்சியே மக்களாட்சி. ஆனால் இந்த நாட்டு மக்களில் 50% பேருக்கு குடிக்க கஞ்சியில்லை. அதன் காரணம் என்ன என்பது அவர்களுக்கே தெரியாது.
    பாரதி பாடினானே,
    கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம்

    இல்லையேன்னும் அறிவுமில்லார்
    அந்த நிலை இனிமேல் மாறும் நிலை ஏற்படும். அதற்கு காரணம் தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். மக்கள் தங்களுக்கு உள்ள உரிமைகள், வாய்ப்புகள், சலுகைகள் என்னென்ன என்ற தகவல் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தின் பொது தேவைகளுக்கான உரிமைகள், தேவைகள் அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டங்கள், அத்திட்டங்களை நிறைவேற்ற வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி, அந்த நிதி செலவிடப்படும் விதம் - அதற்கான மேற்பார்வை - கண்காணிப்பு முறைகள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை மறுக்கப்படும் பொழுது அவற்றிற்காக குரல் கொடுப்பார்கள்.
    எடுத்துக்காட்டாக ஒரு சாலையையோ அல்லது பாலத்தையோ அமைக்கும் பணி சரியாக நடைபெறவில்லை என்றால் என்ன நடக்கும் என்றும் தெரிந்தும் அது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இப்பொழுது முடியும் தகவல் உரிமை சட்டத்தின் வழியாக. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தின் தேவையை பல
      நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்புகளில் சுட்டிக் காட்டிய பொழுதும் மத்திய அரசு இதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
    இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் மாநிலம் தமிழகம். 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் நாள் 1997-98-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டன. 1997-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் அச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. காரணம் அச்சட்டம் 21 விதிவிலக்குகளை சுட்டிக் காட்டியது. 12 ­ரத்துகளை தெளிவாக வரையறை செய்யவில்லை. தனியார் அமைப்புகள் பற்றி குறிப்புகள் இல்லை. ஆனால் அச்சட்டம் அகில இந்திய அளவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வர வழிகாட்டியாக அமைந்தது.
    2002-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திரு. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசால் தகவல் அறியும் சுதந்திர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அம் மசோதா சட்டமாகவில்லை. 2004-ல் புதிய அரசு (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா தயாரானது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் பலவீனமானது. தேசிய ஆலோசனைக் குழு தலைவர் திருமதி. சோனியாகாந்தி தலையிட்டு தங்கள் குழு அளித்த 62 பரிந்துறைகளையும் அச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சட்ட முன்வடிவாக திரு. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 148 திருத்தங்களுடன் பரிந்துறை செய்தது. பிரதமரால் நியமிக்கப்பட்ட திரு. பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர் நிலைக்குழு ஆய்வு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2005 ஜுன் 15-ந் தேதி நிறைவேற்றப்பட்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
    முதல் முறையாக ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாக கருதப்படும் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தையும் இந்த நாட்டின் குடிமக்கள் எல்லா துறைகளிலும் தகவல்கள் பெறலாம்.
    இந்நாள் வரையில் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் தங்களுக்குள் மூடி வைத்திருந்தனர். ஆனால் இச்சட்டத்தின்படி குறித்த காலத்தில் தகவல் தர மறுத்தாலோ அல்லது தவறான தகவலை அளித்தாலோ அல்லது குறைவான ஆவணங்களையோ, தவறாக திசை திருப்பும் அதிகாரிக்கு றீeஉமிrஷ்லிஐ 7(1)-ன்படி ஒரு நாளைக்கு ரூ. 250/- முதல் ரூ. 25,000/- வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
    எடுத்துக்காட்டாக தங்களுக்கு வழங்கப்பட்ட ரே­ன் எவ்வளவு ஒரு திட்டத்திற்கு செலவிட்ட தொகை எவ்வளவு என்றும் விவசாயிகள் தங்களுக்கு அரசு அளிக்கும் இலவச
    திட்டம், மான்யம் எவ்வளவு, அதிகாரிகள் செலவிட்ட தொகை எவ்வளவு என்றும் கேட்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
    தகவல் பெற முடியாதது :
    இச்சட்டம் Section (24)4-ன்படி மத்திய மாநில அரசால்
    - அறிவிக்கப்பட்ட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பொருந்தாது.
    - நீதித்துறையால் தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகள்.
    - தகவல் வெறியிடுவதால் மக்கள் சபை மற்றும் மாநில சட்டசபைகளில் உரிமை
    மற்றும் தனி சுதந்திரத்தை பறித்தல்.
    - வாணிக ரகசிய தகவல்கள், வாணிக ரகசியங்கள் அல்லது ரகசிய சொத்துக்கள்,
    - ஜம்மு - காஷ்மீர் அரசை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.
    தமிழக நிலை :
    மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் தனியாக தகவல் உரிமைச் சட்டம் இயற்ற தடை ஏதுமில்லை. தமிழக அரசு சட்டம் ஏதும் இயற்றவில்லை. மத்திய அரசின் விதி விலக்கு பல இருக்கிறது. மேலும் தமிழக அரசு 33 விதி விலக்குகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு அந்தந்த துறை அதிகாரிகளை தகவல் அதிகாரிகளாக நியமிக்காமல் உதவி பொது மக்கள் தகவல் அதிகாரிகளாக நியமித்துள்ளது. தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையே நியமித்துள்ளது.
    தகவல் பெற கட்டணம் :
    மத்திய அரசு தகவல் பெற கட்டணம் ரூ. 10/- நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ. 50/- நிர்ணயம் செய்துள்ளது. றீeஉமிஷ்லிஐ (6)-ன் படி விண்ணப்பமும்
    ரூ. 50/- க்கான பணம் (அ) வங்கி வரைவோலை (ம்.ம்.) அல்லது காசோலையாக மத்திய பொது தகவல் அதிகாரியின் பெயரில் எடுக்க வேண்டும். பேப்பர் பு4 (அ) பு3 அளவுக்கு ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ. 2/- செலுத்த வேண்டும். ஒரு ஆவணத்தை நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது. பின்பு ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ. 5/- வசூலிக்கப்படும்.
    - தகவல்களை பிளாப்பி அல்லது கணினி டிஸ்கில் கொடுப்பதற்கு ரூ. 15/- வசூலிக்கப்படும்.
    - பிரிண்டிங் கொடுப்பதற்கு அந்தந்த பிரிண்டரின் செலவை பொறுத்துதான்.
    தகவல் என்பது :

    - பதிவேடுகள் (Record) - உத்தரவு (Order)
    - ஆவணங்கள் (Documents) - பயண விவரம் (Log Books)
    - விளக்கம் (Memo) - ஒப்பந்தம் (Contract)
    - இமெயில் (Email) - அறிக்கை (Report)
     - கருத்து (Opinion) - மாதிரிகள் (Models)
    - பரிந்துரை (Recommendation) - கணினி டேட்டா
    - பத்திரிக்கை அறிக்கை - தனியார் பொது துறையாக
    - சுற்றறிக்கை (Circular) இருந்தால் அதன் தகவல்
    - கோப்பு இல்லாத தகவல்களுக்கு பொருந்தாது
    தகவல் அறிதல் என்பது
    - வேலைகள் கண்காணித்தல், ஆவணங்கள், பதிவேடுகள், சான்றிதழ்கள் இவற்றிலிருந்து குறிப்பு எடுத்தல்.
    - சான்றிதழ் நகல் எடுத்தல்.
    - தகவல்களை பிரிண்ட் எடுத்தல்.
    - கேசட்டுகளில், வீடியோவில் பதிவு செய்தல்.
    தகவல் அதிகாரிகள் :
    தேசிய அளவில் :
    தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தஸ்திற்கு இணையாக தலைமை தகவல் ஆணையர்.
    மாநில அளவில் :
    தலைமை செயலர் அந்தஸ்திற்கு இணையாக தçலைமை தகவல் ஆணையர்.
    - மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு துறை சார்பிலும் தகவல் அதிகாரிகள்.
    - பஞ்சாயத்து சம்பந்தமாக தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் மூலமே பெற வேண்டும்.
    - மற்ற துறைகளில் அதற்கென அந்தந்த துறை சார்ந்த உதவி தகவல்
    அதிகாரியின் மூலம் பெற முடியும்.
    தகவல் பெறுதல் :
    Section 5 - Subsection (2)ன் படி விண்ணப்பித்த நபர்களுக்கு மத்திய பொது தகவல் அதிகாரி அல்லது மாநில பொது தகவல் அதிகாரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவோ அல்லது அதை தக்க காரணங்களுடன் திருப்பி அனுப்ப வேண்டும். கேட்கும் தகவல் ஒருவருடைய வாழ்க்கைக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ கேட்கப்பட்டிருந்தால் விண்ணப்பம் வந்து 48 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்கப்பட வேண்டம்.
    தகவல் மறுப்பதற்கு காரணம் :

    Sub section (1)ன் படி தகவலை கொடுப்பதை மறுப்பதற்கு மத்திய அல்லது மாநில தகவல் அதிகாரி மனுதாரருக்கு
    1. மறுக்கப்பட்டதற்கான காரணங்கள்.
    2. எத்தனை நாட்களுக்குள் மறுக்கப்பட்ட நாளிலிருந்து மேல் முறையீடு
    செய்யலாம்.
    3. மேல் முறையீட்டு அலுவலகத்தின் விவரம்.
    போன்றவை தெரிவிக்க வேண்டும்.
     
    தகவல் பெற மாதிரி விண்ணப்ப படிவம்

     To,
    The Assistant Police Commissioner,
    (or)
    Public Information Officer,
    1. Name of applicant 

    2. Address 

    3. Particulars of information required
    (i) Subject matter of information 
    (ii) Period to which the information relations  to 
    (iii) Description of information required 
    (iv) Whether information is required by post or in person 
    (v) In case of post (ordinary, Registered or speed) 

    4. Whether the Applicant is below poverty Line : 
    (of yes attach a photo copy of the proof there of)
    Place :
    Date :                   Signature of the Applicant

    தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS.

    மனித உரிமைகள்

    மனிதனின் அடிப்படை தேவைகள் - உணவு, உடை, இருப்பிடம். இவை மட்டும் இருந்தால் போதாது. அவன் மனித மாண்போடு வாழ தேவையானவைகளை நிறைவு செய்வதே மனித உரிமைகளாகும்.

    எல்லா மனிதர்களும் சுதந்திரமாக பிறந்தவர்கள், சம உரிமை உடையவர்கள், பகுத்தறிவும், உள்ளுணர்வும் கொண்டவர்கள் (சுதந்திரமாக பிறந்து சாதி, மதம், கட்சிகள் என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார் ஜேக்குஸ் ரூசே) எனவே சக மனிதர்களிடம் சகோதரத்துவ உணர்வுடன் நடக்க கடமைப்பட்டவர்கள் என்கிறது மனித உரிமைக்கான உலக சாசனம்.

    மனித உரிமைகளின் பிரிவுகள் : 

    1. குடி உரிமைகள் (Civil Rights)

    2. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

    3. மனித உரிமைகள் (Human Rights)

    குடி உரிமைகள் என்பது அந்தந்த நாட்டு அரசு அந்தந்த குடிமக்களுக்கு வழங்கும் உரிமையாகும்.

    அ. வாழ்வுரிமை - பிறந்த இடத்தில் வசிக்க வழங்கப்பட்டுள்ள உரிமை.

    ஆ. சுதந்திர உரிமை - பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இவற்றில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

    இ. சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமை - இன்னல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து மீள உரிமை.

    ஈ. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படும் உரிமை - பாமர குடிமகன் முதல் முதல் குடிமகன் வரை சமமாக நடத்தப்படும் உரிமை.

    உ. பாகுபாட்டிற்கு எதிரான உரிமை - சாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை.

    ஊ. தேசியத்தை சார்ந்திருக்கும் உரிமை - எந்த மதத்தில் பிறந்தவராக இருந்தாலும் பிறந்த தேசத்தை சார்ந்திருக்க உரிமை.

    அரசியல் உரிமை : 

    அ. கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை - ஒருவர் தாம் சொல்ல விரும்பும் கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை.

     ஆ. சுதந்திரமாக கூட்டம் கூட்டும் உரிமை - சட்டத்திற்கு உட்பட்டு.

    இ. இயக்கங்களை கட்டி எழுப்பும் உரிமை.

    ஈ. வாக்களிக்கும் உரிமை - 18 வயதிற்கு நிரம்பியர் தான் விரும்புகின்ற நபருக்கு வாக்களிக்க உரிமை.

    உ. அரசியலில் ஈடுபட உரிமை.

    பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் : 

    அ. வேலை பெறும் உரிமை - தன் தகுதிக்கேற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பெறும் உரிமை.

    ஆ. வேலையை தேர்ந்தெடுக்க உரிமை - தான் விரும்புகின்ற தொழிலை, வேலையை தேர்வு செய்யும் உரிமை.

    இ. சொத்துரிமை - தன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துகளை உரிமையாக்கிக் கொள்ளும் உரிமை.

    ஈ. போதுமான ஊதியம் பெறும் உரிமை - உழைப்பிற்கேற்ற ஊதியம் கோர உரிமையுண்டு.

    உ. கல்வி பெறும் உரிமை - அடிப்படை கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி வரை பெற உரிமை.

    ஊ. குடும்பத்தை உருவாக்கும் உரிமை.

    எ. சமூக பாதுகாப்பு பெறும் உரிமை - உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு கோரும் உரிமை.

    ஏ. காப்பீடு செய்து கொள்ளும் உரிமை - தன்னுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் காப்பீடு செய்ய உரிமை.

    ஐ. மருத்துவ உதவி பெற உரிமை.

    ஒ. சட்டத்தின் வழியில் ஒவ்வொருவரும் போராடவும் ஒன்று கூடவும் உரிமையுண்டு.

    அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) 

    அடிப்படை உரிமைகள் என்பது அந்தந்த நாட்டிற்கு மட்டும் பொருந்தக் கூடியது. நமது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் வழங்கி இருக்கிறது.

    1. பிரிவு 14-18 சமத்துவ உரிமை (Rights to equality)

    2. 19 - 22 சுதந்திர உரிமை (Right to Freedom)

    சுதந்திர உரிமை என்பது பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என விரிவான விளக்கம் பெறுகிறது. அவைகள்

    19(1) a பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரம் (Freedom of speech & Expression)
    19(1) b ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Form Assembly)

    19(1) c சங்கம் அமைக்கும் சுதந்திரம் (Freedom of Form association)

    19(1) d இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம் (Freedom of Reside and Settle)

    19(1) e இந்தியா எங்கும் தங்கி வாழும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)

    19(1) f தொழில், பணி, வணிகம் செய்யும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)

    3. பிரிவு 23 - 24 சுரண்டலுக்கு எதிரான உரிமை (Rights to fight against Exploitation)

    4. பிரிவு 25 - 28 சமய சுதந்திர உரிமை (Rights to freedom of Religion)

    5. 29 - 30 கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமை (Cultural and educational Rights)

    6. அரசியலமைப்பு தீர்வு வழிகள் (Rights of constitutional Remedies)

    7. கருத்து சுதந்திரம் (Rights to Expression)

    மனித உரிமைகள் (Human Rights)

    மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும்.

    மனித உரிமை என்பது ஒற்றை பரிமான நிலையில் நோக்காமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சார உரிமைகளோடு இணைத்துப் பார்க்கின்ற பன்முக பார்வையாகும்.

    மனித உரிமை என்னும் கட்டமைப்பை சூழ்ந்து குடிமக்கள், மக்கள் இயக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக பொருளாதார மேம்பாடு, மத்திய மாநில அரசுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என உள்ளது. இவைகளுக்கு மத்தியில் மனித உரிமைகளை காப்பது, செயல்படுத்துவது என்பது கடினம் என்றாலும் மனித உரிமைகளை பெறுவது நமது கடமையாகும். மனித உரிமைகளைப் பற்றி பேசும் போது, அதற்காக அரசிடம் போராடும் பொழுது பயங்கரவாதி அல்லது தீவிரவாதி என்று கூறி அடக்குமுறை கையாளப்படுகிறது.

    காவல் துறையை பற்றிய மனித உரிமைகள் :

    - கைது செய்யும் பொழுது அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.

    - கைதுக்கு கைவிலங்கு போட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
      
     - 16 வயதிற்கு கீழ் உள்ள ஆண் / பெண் சிறுவர்களை விசாரணை என்ற பெயரில்
    இருக்கும் இடத்தைவிட்டு அழைக்கக் கூடாது.

    - பெண்களை மாலை 6.00 மணிக்குமேல் கைது செய்யக்கூடாது.

    - கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.

    - கைதியை அடிக்கக் கூடாது.

    மனித உரிமை சட்டங்கள் : 

    1993 - மனித உரிமை பாதுகாப்புச் சட்டம். இதில் அரசியல் அமைப்பு சட்டம் 338ன் கீழ் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    1992 - சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    1999 - மகளிர் நல பாதுகாப்பிற்கென தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    1950 - மனித வர்த்தகம் சம்பந்தமான பன்னாட்டு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    1923 - தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.

    1926 - தொழிற்சங்க சட்டம்.

    1936 - சம்பள சட்டம்.

    1942 - வாராந்திர விடுமுறை சட்டம்.

    1946 - தொழில் நிறுவன, வேலை நிலையானைகள் சட்டம்.

    1947 - தொழில் தகராறு சட்டம்.

    1948 - தொழிலாளர் காப்புறுதி சட்டம்.

    1948 - தொழிற்சாலை சட்டம்.

    1948 - குறைந்தபட்ச சம்பள சட்டம்.

    1952 - தொழிலாளர் சேமநிதி சட்டம்.

    1966 - பீடி, சிகரெட் தொழிலாளர்கள் வேலை நிபந்தனைகள் சட்டம்.

    1971 - மருத்துவ முறையில் கருச்சிதைவு சட்டம்.

    1976 - சம ஊதிய சட்டம்.

    1986 - சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்.

    1993 - பயங்கரவாத தடுப்பு சட்டம்

    1994 - மனித உறுப்புகள் மாற்று சட்டம்.

    போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு எட்டாதது" என்றார் பேரறிஞர் அண்ணா.

    ஆம். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென்று தனித்தனி ஆணையங்களும், நீதி மன்றங்களும், உரிமை சாசனங்களும், பிரகடனங்களும் எவ்வளவோ உருவான பின்பும் ஆங்காங்கே மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் நிலைதான் இன்றளவும் தொடர்கின்றது. இந்நிலை மாற மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க சங்கங்களாக கூட்டமைப்புகளாக ஒன்றிணைவோம்.

    தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS